ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் தொடர் குண்டு வெடிப்பு; 2 பேர் பலி

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் நடந்த இரட்டை குண்டு வெடிப்பு சம்பவத்துக்கு ஐ.எஸ்.பயங்கரவாதிகள் பொறுப்பேற்றுள்ளனர்.
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் தொடர் குண்டு வெடிப்பு; 2 பேர் பலி
Published on

காபூல்,

ஆப்கானிஸ்தானை கடந்த ஆகஸ்டு மாதம் தலீபான் பயங்கரவாதிகள் கைப்பற்றினர். அப்போது முதலே ஐ.எஸ். பயங்கரவாதிகள் தலீபான்களை குறிவைத்தும், ஷியா பிரிவு முஸ்லிம்களுக்கு எதிராகவும் தொடர்ச்சியாக பயங்கரவாத தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

இந்த சூழலில் கடந்த சில வாரங்களாக ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் தொடர் குண்டு வெடிப்பு சம்பவங்கள் நிகழ்த்தப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் காபூலின் மேற்கு பகுதியில் உள்ள தாஷ்ட்-இ-பார்ச்சி மாவட்டத்தில் நேற்று காலை மினி பஸ் ஒன்றில் பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்து சிதறியது. இதில் அந்த பகுதியே அதிர்ந்தது. குண்டு வெடிப்பில் சிக்கி 2 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தனர்.

மேலும் 3 பேர் காயமடைந்தனர். இதற்கிடையில் இந்த குண்டு வெடிப்பு நடந்த அடுத்த சில நிமிடங்களில் அதே பகுதியில் மற்றொரு குண்டு வெடித்தது. இதில் பெண் ஒருவர் பலத்த காயம் அடைந்தார்.

அடுத்தடுத்து நடந்த இந்த இரட்டை குண்டு வெடிப்பு சம்பவத்துக்கு ஐ.எஸ்.பயங்கரவாதிகள் பொறுப்பேற்றுள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com