ஆப்பிரிக்க நாட்டில் ராணுவம் தாக்குதலில் 2 பயங்கரவாதிகள் பலி

ஆப்பிரிக்க நாட்டில் ராணுவம் தாக்குதலில் 2 பயங்கரவாதிகள் பலியாகினர். மேலும் ஒரு போலீஸ்காரரும் உயிரிழந்தார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

யாவுண்டே,

ஆப்பிரிக்க நாடுகளான நைஜீரியா மற்றும் கேமரூனில் போகோ ஹராம் என்ற பயங்கரவாத அமைப்பு செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பின் முக்கிய நோக்கம் மேலை நாட்டு கல்வி முறையை தடை செய்வது ஆகும். இதற்காக அப்பாவி பொதுமக்கள் மற்றும் ராணுவ வீரர்கள் மீது அடிக்கடி தாக்குதலில் ஈடுபடுகின்றனர்.

அந்தவகையில் கேமரூன் நாட்டின் 2 terrorists killed in army attack in African countryபகுதியில் பொதுமக்கள் மீது போகோ ஹராம் அமைப்பினர் தாக்குதல் நடத்தினர். இது குறித்த தகவலின்பேரில் ராணுவத்தினர் அங்கு விரைந்து சென்றனர். பின்னர் ராணுவ வீரர்கள் நடத்திய துப்பாக்கி சூடு நடத்தி பயங்கரவாதிகளை விரட்டியடித்தனர். இதில் 2 பயங்கரவாதிகள் சம்பவ இடத்திலேயே பலியாகினர். துரதிர்ஷ்டவசமாக இந்த தாக்குதலில் உள்ளூர் போலீஸ்காரர் ஒருவரும் உயிரிழந்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com