தைவானில் 2 நாட்களில் 2வது முறையாக கடுமையான நிலநடுக்கம்

தைவான் நாட்டில் கடந்த 2 நாட்களில் 2வது முறையாக இன்று கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.
தைவானில் 2 நாட்களில் 2வது முறையாக கடுமையான நிலநடுக்கம்
Published on

தைப்பே,

தைவான் நாட்டின் கிழக்கே தைதுங் பகுதியில் இன்று காலை கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 5.2 ஆக பதிவாகி இருந்தது என சீன நிலநடுக்க நெட்வொர்க் மையம் தெரிவித்து உள்ளது. இந்நிலநடுக்கம் 24 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது என்றும் தெரிவித்து உள்ளது.

இதனால் ஏற்பட்ட பொருளிழப்புகள் உள்ளிட்ட விவரங்கள் எதுவும் உடனடியாக வெளியிடப்படவில்லை. தைவானில் கடந்த 2 நாட்களில் 2வது முறையாக கடுமையான நிலநடுக்கம் உணரப்பட்டு உள்ளது.

கடந்த செவ்வாய் கிழமை (நேற்று முன்தினம்) இரவு 11.11 மணியளவில் தைப்பே நகரில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.7 ஆக பதிவாகி இருந்தது என தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்து இருந்தது.

இந்நிலநடுக்கம் தைப்பே நகரில் இருந்து தெற்கே 182 கி.மீ. தொலைவிலும், 30 கி.மீ. ஆழத்திலும் மையம் கொண்டிருந்தது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com