எக்ஸ்பிரஸ் ரெயில் தடம்புரண்டு விபத்து - 3 பேர் பலி

மீட்புக்குழுவினர் படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர்
எக்ஸ்பிரஸ் ரெயில் தடம்புரண்டு விபத்து - 3 பேர் பலி
Published on

பெர்லின்,

ஜெர்மனியின் பேடன்-வூர்ட்டம்பேர்க் மாகாணத்தின் சிங்மெரிஜென் நகரில் இருந்து உல்ம் நகருக்கு நேற்று மாலை 6 மணிக்கு (அந்நாட்டு நேரப்படி) எக்ஸ்பிரஸ் ரெயில் சென்றுகொண்டிருந்தது.

அந்த ரெயிலில் 100க்கும் மேற்பட்டோர் பயணித்தனர். பிபிரிட்ச் மாவட்டத்தில் சென்றுகொண்டிருந்தபோது ரெயிலின் 2 பெட்டிகள் தடம்புரண்டன.

இந்த விபத்தில் ரெயிலில் பயணம் செய்த 3 பயணிகள் உயிரிழந்தனர். மேலும், 41 பேர் காயமடைந்தனர். தகவலறிந்து விரைந்து சென்ற மீட்புக்குழுவினர் படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். மேலும், இந்த ரெயில் விபத்து தொடர்பாக ரெயில்வே அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.  

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com