கடந்த 3 நாட்களில் ஓமனில் 3,217 பேருக்கு கொரோனா; 52 பேர் பலி

ஓமன் சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கடந்த 3 நாட்களில் ஓமனில் 3,217 பேருக்கு கொரோனா; 52 பேர் பலி
Published on

ஓமனில் கடந்த 3 நாட்களில் மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனை முடிவுகளில், 3 ஆயிரத்து 217 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், ஓமனில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 84 ஆயிரத்து 905 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர்களில் கடந்த 3 நாட்களில், 7 ஆயிரத்து 125 பேர் குணமடைந்து தங்களது வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். இதனால் ஓமனில் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2 லட்சத்து 57 ஆயிரத்து 689 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்றில் இருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 90.4 சதவீதமாக குறைந்துள்ளது.கொரோனா தொற்று காரணமாக கடந்த 3 நாட்களில் 52 பேர் பலியானார்கள். இதனால், பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 3 ஆயிரத்து 423 ஆக அதிகரித்தது. தற்போது உடல்நலக்குறைவால் 501 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.பொதுமக்கள் குழுவாக சந்திப்பதை தவிர்த்துக் கொண்டு, அவசியத் தேவை இருந்தால் மட்டும் வெளியில் செல்ல கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com