ஆப்கானிஸ்தானில் வெவ்வேறு இடங்களில் நடந்த குண்டுவெடிப்பு: 5 பேர் பலி

ஆப்கானிஸ்தானில் வெவ்வேறு இடங்களில் நடந்த குண்டுவெடிப்பில் சிக்கி 5 பேர் பலியாகினர்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

காபூல்,

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் 3 இடங்களில் நடந்த வெவ்வேறு குண்டுவெடிப்பு சம்பவங்களில் 2 ராணுவ வீரர்கள் உள்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி பலியாகினர்.

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ளூர் நேரப்படி நேற்று காலை 8:00 மணி முதல் 10:00 மணி வரை 3 வெவ்வேறு இடங்களில் குண்டு வெடிப்புகள் நடந்ததாக போலீஸ் செய்தித் தொடர்பாளர் பெர்டாஸ் பெரமர்ஸ் தெரிவித்தார்.

மேலும் இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் பலர் படுகாயமடைந்தனர். இந்த தாக்குதல்களுக்கு உடனடியாக எந்த ஒரு பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com