

சிங்கப்பூர்,
சிங்கப்பூரில் நேற்று ஒரே நாளில் 506 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டது. இவர்களில் பெரும்பாலானோர், வெளிநாட்டு தொழிலாளர்களுக்கான தங்குமிடங்களில் வசிப்பவர்கள் ஆவர். இதையடுத்து, மொத்த பாதிப்பு எண்ணிக்கை 34 ஆயிரத்து 366 ஆக அதிகரித்துள்ளது. இதுபோல், சாங்கி சிறையில் 3 கைதிகளுக்கும், ஒரு நர்சுக்கும் கொரோனா உறுதி ஆகியுள்ளது.