சீனாவில் 52 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்புகள் உறுதி

சீனாவில் 52 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டு உள்ளன.
சீனாவில் 52 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்புகள் உறுதி
Published on

பீஜிங்,

உலகம் முழுவதும் பரவியுள்ள கொரோனா பாதிப்புகள் முதன்முதலில் சீனாவில் கண்டறியப்பட்டது. அதன்பின்பு பரவல் கட்டுப்படுத்தப்பட்டது. ஊரடங்கில் முதன்முறையாக தளர்வுகளையும் அந்நாடு அறிவித்தது.

இந்த நிலையில், அந்நாட்டில் மீண்டும் பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டு வருகின்றன. இதன்படி, 52 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டு உள்ளன. இவற்றில் 32 பாதிப்புகள் உள்ளூர்வாசிகளிடமும், 20 பாதிப்புகள் வெளிநாட்டில் இருந்து வந்தவர்களுக்கும் ஏற்பட்டு உள்ளன.

32 பேரில் 25 பேர் லையானிங் பகுதியை சேர்ந்தவர்கள் ஆவர். 3 பேர் ஹெனான், 2 பேர் ஹெய்லாங்ஜியாங் மற்றும் ஹெபய், யுன்னான் பகுதியில் தலா ஒருவருக்கும் பாதிப்புகள் ஏற்பட்டு உள்ளன.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com