ஜப்பான் தலைநகர் டோக்கியோ அருகில் திடீர் நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 6.3 ஆக பதிவு

ஜப்பான் தலைநகர் டோக்கியோ அருகில் ஏற்பட்ட திடீர் நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோலில் 6.3 ஆக பதிவாகி உள்ளது.
ஜப்பான் தலைநகர் டோக்கியோ அருகில் திடீர் நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 6.3 ஆக பதிவு
Published on

டோக்கியோ,

ஜப்பான் தலைநகர் டோக்கியோ அருகே நேற்று இரவு 10.53 மணிக்கு (இந்திய நேரப்படி) ஏற்பட்ட திடீர் நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.3 ஆக பதிவாகி உள்ளதாக தேசிய நிலநடுக்க ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கத்தின் மையப்பகுதி ஜப்பானின் டோக்கியோவில் இருந்து 631 கி.மீ வடக்கு-வடகிழக்கில் இருந்ததாக தேசிய நிலநடுக்க ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் கடலுக்கு அடியில் அதன் மேற்பரப்பில் இருந்து 59 கி.மீ ஆழத்தில் உருவாகி இருந்தது.

நிலநடுக்கம் காரணமாக ஏற்பட்டுள்ள சேதங்கள் குறித்த அதிகாரபூர்வ தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

X

Daily Thanthi
www.dailythanthi.com