இலங்கையில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு அகதிகளாக செல்ல முயன்ற 67 பேர் கைது

இலங்கையில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு அகதிகளாக செல்ல முயன்ற 67 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இலங்கையில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு அகதிகளாக செல்ல முயன்ற 67 பேர் கைது
Published on

கொழும்பு,

இலங்கையில் வரலாறு காணாத பெருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அத்தியாவசியப் பெருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு, அவற்றின் விலையும் பலமடங்கு உயர்ந்துள்ளது. இதனால், மக்கள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர்.

உணவுகூட கிடைக்காமல் ஏராளமானேர் திண்டாடுகின்றனர். அரசுக்கு எதிராக மக்கள் தெருவில் இறங்கி பேராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே, உணவுப் பஞ்சத்தால் தமிழ் குடும்பங்களைச் சேர்ந்த பலர் அகதிகளாக தமிழகத்துக்கு வரத் தெடங்கியுள்ளனர். ஏற்கனவே பல குடும்பங்கள் ராமேசுவரத்துக்கு வந்து முகாம்களில் தங்கியுள்ளனர்.

இந்நிலையில், இலங்கையில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு அகதிகளாக தப்பி செல்ல முயன்ற 67 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். திரிகோணமலை சல்லி கடற்பகுதியில் 67 பேரையும் இலங்கை கடற்படையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com