ஆப்கானிஸ்தானில் 69 தலீபான்கள் கொன்று குவிப்பு; முக்கிய நகரத்தை உள்நாட்டு படைகள் மீட்டன

ஆப்கானிஸ்தானில் மேற்கு பகுதியில், பத்கிஸ் மாகாணத்தில் அமைந்துள்ள முக்கிய நகரமான காலா இ நாவ் நகரத்துக்குள் தலீபான் பயங்கரவாதிகள் நேற்று முன்தினம் நுழைந்து அந்த நகரத்தை கைப்பற்றினர்.
ஆப்கானிஸ்தானில் 69 தலீபான்கள் கொன்று குவிப்பு; முக்கிய நகரத்தை உள்நாட்டு படைகள் மீட்டன
Published on

இது நேட்டோ படைகள் அங்கிருந்து புறப்படுவதற்கு முன்னர் விரைவான முன்னேற்றத்தை தொடர்வதில் தலீபான்கள் தீவிரம் காட்டியதின் விளைவு ஆகும். ஆனால் அங்கு தலீபான் பயங்கரவாதிகள் மீது உள்நாட்டு படைகள் தொடர்ந்து தீவிர தாக்குதல் நடத்தி, அந்த நகரத்தை அதிரடியாக மீட்டன. இந்த தாக்குதலில் 69 தலீபான் பயங்கரவாதிகளை உள்நாட்டு படைகள் கொன்று குவித்துள்ளன. 23 பேர் படுகாயம் அடைந்தனர்.

தலீபான் பயங்கரவாதிகளின் ஏராளமான ஆயுதங்களையும் ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு படையினர் கைப்பற்றி உள்ளனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com