பாகிஸ்தானில் எறிகுண்டு தாக்குதலில் 4 குழந்தைகள் உள்பட 10 பேர் பலி

பாகிஸ்தானில் கராச்சி நகரில் நடந்த எறிகுண்டு தாக்குதலில் 4 குழந்தைகள் உள்பட 10 பேர் கொல்லப்பட்டனர்.
பாகிஸ்தானில் எறிகுண்டு தாக்குதலில் 4 குழந்தைகள் உள்பட 10 பேர் பலி
Published on

கராச்சி,

பாகிஸ்தானின் கராச்சி நகரில் மவாச் கோத் பகுதியில் லாரி ஒன்றின் மீது எறிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது. இந்த தாக்குதலில் 4 குழந்தைகள் மற்றும் 6 பெண்கள் உள்பட 10 பேர் கொல்லப்பட்டனர்.

மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் எறிகுண்டு வீச்சில் ஈடுபட்டு உள்ளனர். அவர்கள் எறிகுண்டை தூக்கி எறிந்துவிட்டு சென்றுள்ளனர் என முதற்கட்ட விசாரணை தெரிவிக்கின்றது. இதுவரை 10 பேரின் உடல்கள் மீட்கப்பட்டு உள்ளன.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com