

கைபர் பக்துன்குவா,
உலக நாடுகளில் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்புகள் பாகிஸ்தானையும் விட்டு வைக்கவில்லை. இதனை தடுக்க அந்நாட்டில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு பின்பு நீக்கப்பட்டது. தொடர்ந்து பாதிப்பு உயர தொடங்கிய நிலையில், குறிப்பிட்ட பகுதிகளில் ஊரடங்கு அமலானது.
எனினும், அந்நாட்டில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2 லட்சத்து 67 ஆயிரத்து 400 ஆக உயர்ந்து உள்ளது. இது ஒருபுறம் இருக்க, பாகிஸ்தானில் பயங்கரவாத தாக்குதல்களும் நடந்து வருகின்றன.
பாகிஸ்தானின் கைபர் பக்துன்குவா மாகாணத்தில் பராசினார் பகுதியில் தூரி பஜாரில் காய்கறி வண்டி ஒன்றில் சக்தி வாய்ந்த குண்டு ஒன்று வைக்கப்பட்டு இருந்தது. திடீரென அந்த குண்டு வெடித்ததில், 16 பேர் காயமடைந்தனர். இந்த செயலில் ஈடுபட்டவர்கள் யாரென உடனடியாக தெரியவில்லை. இதுபற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.