எச்சரிக்கையை மீறி ஆற்றில் கை கழுவிய நபர்... படகில் இருந்து இழுத்து சென்ற சுறா..!! பரபரப்பு வீடியோ

அமெரிக்காவில் நண்பரின் எச்சரிக்கையை மீறி ஆற்றில் கை கழுவிய நபரை படகில் இருந்து சுறா ஒன்று இழுத்து சென்ற பரபரப்பு வீடியோ வெளிவந்து உள்ளது.
எச்சரிக்கையை மீறி ஆற்றில் கை கழுவிய நபர்... படகில் இருந்து இழுத்து சென்ற சுறா..!! பரபரப்பு வீடியோ
Published on

புளோரிடா,

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் நேசனல் எவர்கிளேட்ஸ் என்ற பெயரில் பூங்கா ஒன்று உள்ளது. இதில், மீனவரான நபர் ஒருவர் தனது நண்பர் மைக்கேல் ரஸ்சோ என்பவருடன் ஆற்றில் படகு சவாரி செய்து உள்ளார்.

அப்போது, ஆற்று நீரில் அந்நபர் கையை கழுவ முயன்று உள்ளார். ஆனால், உடனிருந்த அவரது நண்பர் மைக்கேல் ரஸ்சோ, ஆற்றில் சுறா மீன்கள் இருக்கும். அதனால் தாக்கப்பட கூடிய ஆபத்து உள்ளது என கூறி எச்சரிக்கை விடுத்து உள்ளார்.

இதனை அந்த நபர் கேட்கவில்லை. இந்த எச்சரிக்கையை மீறி அவர், ஆற்று நீருக்குள் கையை நனைத்து உள்ளார். அப்போது, அந்த பகுதியில் திடீரென வந்த சுறா ஒன்று அவரது கையை கடித்து உள்ளது.

இதனால், வலியால் அந்த நபர் அலறி துடித்து உள்ளார். அவரை சுறா மீன் ஆற்றுக்குள் இழுத்து உள்ளது. இதனை அருகே நின்றிருந்த நண்பர் வீடியோவாக படம் எடுத்து உள்ளார்.

இந்த சம்பவம் பயங்கர நாட்களில் ஒன்றாக இருந்தது என விவரித்து உள்ள அந்த நண்பர் பின்னர் தனது பதிவை அழித்து விட்டார்.

எனினும், சமூக ஊடக பயனாளர்கள் வருங்காலத்தில் இதுபோன்ற சம்பவங்களை தடுக்கும் வகையில், மக்களுக்கு எச்சரிக்கை ஏற்படுத்தும் வகையில் இந்த வீடியோவை மறுபடியும் பகிர்ந்து உள்ளனர்.

நீரில் இரையோ அல்லது ரத்தமோ இல்லாதபோதும் மற்றும் சுறா மீன்கள் தூண்டப்படாதபோதும் இந்த சம்பவம் நடந்து உ ள்ளது. காயமடைந்த அந்த மீனவர், உடனடியாக வான் வழியே மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார்.

தேசிய பூங்கா அதிகாரிகள் சம்பவ பகுதிக்கு உடனடியாக வந்து அவரை மீட்டனர் என நண்பர் ரூஸ்சோ கூறியுள்ளார்.

View this post on Instagram

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com