எல்லை பிரச்சினையை தீர்க்க இரட்டிப்பு முயற்சிக்கு ஒப்புதல்: ஜெய்சங்கர் தகவல்

இந்தியா - சீனா இடையே எல்லை பகுதிகளில் எஞ்சியுள்ள பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு காண்பது குறித்து விவாதிக்கப்பட்டது என்று ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
எல்லை பிரச்சினையை தீர்க்க இரட்டிப்பு முயற்சிக்கு ஒப்புதல்: ஜெய்சங்கர் தகவல்
Published on

அஸ்தானா,

இந்தியா, சீனா, ரஷ்யா உள்ளிட்ட 10 உறுப்பு நாடுகளைக் கொண்ட ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாடு கஜகஸ்தான் நாட்டின் அஸ்தானா நகரில் நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்பதற்காக சென்றுள்ள மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர், மாநாட்டின் இடையே சீன வெளியுறவுத்துறை மந்திரி வாங் யி-யை இன்று சந்தித்து பேசினார். பின்னர் இந்த சந்திப்பு குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "சீன கம்யூனிஸ்ட் கட்சியின் பொலிட்பீரோ உறுப்பினரும் வெளியுறவுத்துறை மந்திரியான வாங் யி-யை இன்று காலை அஸ்தானாவில் சந்தித்தேன்.

இந்தியா - சீனா இடையே எல்லை பகுதிகளில் எஞ்சியுள்ள பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு காண்பது குறித்து அப்போது விவாதிக்கப்பட்டது. அந்த நோக்கத்துக்காக ராஜதந்திர மற்றும் ராணுவ வழிகள் மூலம் முயற்சிகளை இரட்டிப்பாக்க ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது. எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டை மதித்து, எல்லைப் பகுதிகளில் அமைதியை உறுதி செய்வது அவசியம். பரஸ்பர மரியாதை, பரஸ்பர உணர்வு மற்றும் பரஸ்பர நலன் ஆகிய மூன்றும் நமது இருதரப்பு உறவுகளை வழிநடத்தும்" என்று தெரிவித்துள்ளார். எல்லை பகுதிகளில் அமைதி நிலவும் வரை சீனாவுடனான உறவு சாதாரணமாக இருக்க முடியாது என்று இந்தியா தொடர்ந்து கூறி வருகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com