கொலம்பியாவில் வீட்டின் மீது விமானம் விழுந்து நொறுங்கியது - 7 பேர் பலி

கொலம்பியாவில் வீட்டின் மீது விமானம் நொறுங்கி விழுந்து விபத்தில் சிக்கி 7 பேர் பலியாகினர்.
கொலம்பியாவில் வீட்டின் மீது விமானம் விழுந்து நொறுங்கியது - 7 பேர் பலி
Published on

போகோடா,

கொலம்பியாவின் தென்மேற்கு பகுதியில் உள்ள கவுக்கா பிராந்தியத்தின் தலைநகரமான போபாயன் நகரில் இருந்து லோபஸ் டி மிகோ நகருக்கு நேற்று முன்தினம் சிறிய ரக பயணிகள் விமானம் புறப்பட்டு சென்றது. தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான இந்த விமானத்தில் விமானி உள்பட 9 பேர் பயணம் செய்தனர். போபாயன் அருகே உள்ள ஜூனின் நகருக்கு மேலே பறந்து கொண்டிருந்தபோது, விமானம் திடீரென விமானியின் கட்டுப்பாட்டை இழந்தது.

இதில் நிலைதடுமாறிய விமானம் அங்குள்ள குடியிருப்பு பகுதியில் ஒரு வீட்டின் மீது விழுந்து நொறுங்கியது. இந்த கோர விபத்தில் விமானத்தில் இருந்த 9 பேரில் 7 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிர் இழந்தனர்.

மேலும் விமானத்தில் இருந்த 2 பேரும், விமானம் விழுந்த வீட்டில் இருந்த ஒரு குழந்தையும் படுகாயம் அடைந்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com