ஆப்கானிஸ்தானில் வான்வழி தாக்குதல்: 19 தலீபான் பயங்கரவாதிகள் படுகொலை

ஆப்கானிஸ்தானில் நடந்த வான்வழி தாக்குதலில் 19 தலீபான் பயங்கரவாதிகள் படுகொலை செய்யப்பட்டனர்.
ஆப்கானிஸ்தானில் வான்வழி தாக்குதல்: 19 தலீபான் பயங்கரவாதிகள் படுகொலை
Published on

காபூல்,

ஆப்கானிஸ்தான் நாட்டில் நங்கார்ஹர் மற்றும் லோகர் ஆகிய இரு மாகாணங்களில் தலீபான் பயங்கரவாதிகள் மீது அந்நாட்டின் பாதுகாப்பு படையினர் வான்வழி தாக்குதல் நடத்தினர்.

இவற்றில் நங்கார்ஹரில் ஹிசாரக் மற்றும் ஷேர்ஜாத் ஆகிய மாவட்டங்களில் நேற்று மதியம் நடந்த தாக்குதலில் 11 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். 3 பேர் காயமடைந்தனர். லோகர் மாகாணத்தில் நடந்த வான்வழி தாக்குதலில் 8 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். 4 பேர் காயமடைந்தனர்.

இவர்கள் நில கண்ணி வெடிகளையும், சாலையோர குண்டுகளையும் நிறுவும் பணியில் ஈடுபட்டு இருந்தனர் என ராணுவம் தெரிவித்து உள்ளது. இதனால் ஒரே நாளில் வெவ்வேறு இடங்களில் சேர்த்து மொத்தம் 19 தலீபான் பயங்கரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com