

* வடகொரியாவில் நேற்று முன்தினம் (சனிக்கிழமை) ஏவுகணைகள் சோதனை நடத்தப்பட்டுள்ளதாக தென்கொரியா அறிவித்தது. இப்போது அதை வடகொரியாவும் உறுதி செய்துள்ளது. குறுகிய தொலைவில் சென்று தாக்குதல் நடத்தும் ஆற்றல் வாய்ந்த இந்த ஏவுகணை சோதனைகளை அந்த நாட்டின் தலைவர் கிம் ஜாங் அன் மேற்பார்வையிட்டார் என அரசு செய்தி நிறுவனம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.