உலகைச்சுற்றி...

* சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் நேற்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 4.3 புள்ளிகளாக பதிவான நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்து தகவல்கள் இல்லை.
உலகைச்சுற்றி...
Published on

* வெனிசூலாவில் அரசுக்கு எதிராக நடந்து வரும் போராட்டங்களில் வன்முறை வெடித்துள்ளது. நேற்றுமுன்தினம் தலைநகர் கராக்கசில் நடந்த போராட்டத்தின் போது, நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் பெண் ஒருவர் பலியானார். 100-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

* ஒலியை விட வேகமாக செல்லும் 2 ஹைபர்சோனிக் ஏவுகணைகளை அமெரிக்க ராணுவம் தயாரித்து வருகிறது. இந்த ஏவுகணைகள் இந்த ஆண்டு இறுதிக்குள் முழுமையாக கட்டமைக்கப்பட்டு சோதனைக்கு உட்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

* ஆப்கானிஸ்தானின் உருஸ்கான் மாகாணத்தில் திரின் கோட் நகரில் தலீபான் பயங்கரவாதிகளின் நிலைகளை குறிவைத்து ஆப்கான் போர் விமானங்கள் குண்டு மழை பொழிந்தன. இதில் 4 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.

* குவைத் நாட்டை சேர்ந்த 2 பேர், ஈரானின் கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்ததாக கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். தற்போது அவர்கள் இருவரையும் விடுதலை செய்துவிட்டதாக ஈரான் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com