உலகைச்சுற்றி...

கிரிமியாவில் மனித உரிமைகள் மீறப்படுவதாக ஐ.நா. பொதுச்சபையில் உக்ரைன் தீர்மானம் கொண்டு வந்தது.
உலகைச்சுற்றி...
Published on

* ஆப்கானிஸ்தானில் காந்தஹார் மாகாணத்தில் உள்நாட்டு படைகள் நடத்திய அதிரடி தாக்குதலில் 10 தலீபான் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். 5 பேர் கைது செய்யப்பட்டனர். பாரா மாகாணத்தில் நேட்டோ படைகள் நடத்திய வான்தாக்குதலில் 10 தலீபான் பயங்கரவாதிகள் உயிரிழந்தனர்.

* அமெரிக்காவில் மத்திய வங்கி தலைவர் ஜெரோம் பவலை நீக்குவதற்கு ஜனாதிபதி டிரம்ப் பரிசீலிக்கிறார் என்ற தகவலை நிதி மந்திரி ஸ்டீபன் மனுசின் மறுத்துள்ளார்.

* கிரிமியாவில் மனித உரிமைகள் மீறப்படுவதாக ஐ.நா. பொதுச்சபையில் உக்ரைன் தீர்மானம் கொண்டு வந்தது. தீர்மானத்துக்கு ஆதரவாக 65 நாடுகளும், எதிராக 27 நாடுகளும் வாக்களித்தன. 70 நாடுகள் வாக்கெடுப்பை புறக்கணித்தன. பெரும்பான்மையானோர் ஆதரவாக வாக்களித்ததால் தீர்மானம் நிறைவேறியது.

* பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் மீதான 2 ஊழல் வழக்குகளில் இஸ்லாமாபாத் ஊழல் தடுப்பு கோர்ட்டு (தேசிய பொறுப்புடைமை கோர்ட்டு) இன்று (திங்கட்கிழமை) தீர்ப்பு அளிக்கிறது.

* பாலஸ்தீனத்தின் நாடாளுமன்றத்தை கலைக்க அரசியல் சாசன கோர்ட்டு முடிவு எடுத்துள்ளது என அதிபர் மகமது அப்பாஸ் அறிவித்துள்ளார். இதை ஹமாஸ் இயக்கம் எதிர்க்கிறது.


Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com