

* வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன்னின் ஒன்றுவிட்ட சகோதரர் கிம் ஜாங் நாம், மலேசிய தலைநகர் கோலாலம்பூர் விமான நிலையத்தில் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 13-ந் தேதி படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலையில் கைதான இந்தோனேசிய பெண் சிடி ஆயிஷா, வியட்நாம் பெண் டோன் தி ஹூவாங் ஆகியோருக்கு எதிராக வலுவான சாட்சியங்கள் உள்ளதால், செசன்ஸ் கோர்ட்டு முறைப்படி விசாரணை நடத்த ஷா அலாம் ஐகோர்ட்டு உத்தரவிட்டது.