

*வங்காளதேசத்தில் போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக போலீசாரால் கைது செய்யப்பட்டு அழைத்து செல்லப்பட்ட நபர் சுட்டுக்கொல்லப்பட்டார். போதை கடத்தல் கும்பலுடன் நடந்த துப்பாக்கி சண்டையின் போது துப்பாக்கி குண்டு பாய்ந்து அவர் இறந்ததாக போலீசார் கூறினர். ஆனால் போலீசார்தான் அவரை சுட்டுக்கொன்றதாக குற்றம்சாட்டப்படுகிறது. இந்த விவகாரம் அங்கு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.