அமெரிக்கா: சூப்பர் மார்க்கெட்டில் நிகழ்ந்த துப்பாக்கிச்சூட்டில் 10 பேர் உயிரிழப்பு

அமெரிக்காவில் உள்ள சூப்பர் மார்க்கெட்டில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் குறைந்தது 10 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அமெரிக்கா: சூப்பர் மார்க்கெட்டில் நிகழ்ந்த துப்பாக்கிச்சூட்டில் 10 பேர் உயிரிழப்பு
Published on

நியூயார்க்,

அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தில் உள்ள பஃபேலோ நகரில் செயல்பட்டு வரும் ப்ரெண்ட்லி சூப்பர் மார்க்கெட் கட்டிடத்திற்குள் நுழைந்த மர்மநபர் அங்கிருந்தவர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டார். இதில் 10 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. உடனடியாக அந்த நபரை சுற்றி வளைத்த போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

டாப்ஸ் ப்ரெண்ட்லி மார்க்கெட்டில் சுடப்பட்ட கூடுதல் நபர்களின் எண்ணிக்கை மற்றும் அவர்களின் நிலைமைகள் பற்றிய விவரங்கள் உடனடியாக கிடைக்கவில்லை. பல்பொருள் அங்காடியானது, நகரத்திற்கு வடக்கே சுமார் மூன்று மைல் (ஐந்து கிலோமீட்டர்) தொலைவில், கறுப்பர்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் உள்ளது.

துப்பாக்கிச் சூடு நடத்தியவர் காவலில் இருப்பதை அங்குள்ள போலீசார் டுவிட்டர் மூலம் உறுதிப்படுத்தினர், ஆனால் சந்தேக நபரின் அடையாளம் குறித்து தகவல் தெரிவிக்கவில்லை.

அந்த நபர் துப்பாக்கிச் சூட்டை நேரலையில் ஒளிபரப்பியிருக்கலாம் என்றும், அவர் ஆன்லைனில் ஒரு அறிக்கையை வெளியிட்டாரா என்பதை ஆராய்ந்து வருவதாகவும் புலனாய்வாளர்கள் நம்புகிறார்கள் என்று அங்குள்ள போலீஸ் அதிகாரி ஒருவர் கூறினார். விசாரணை அதன் ஆரம்ப கட்டத்தில் இருப்பதாகவும், அதிகாரிகள் இன்னும் தெளிவான நோக்கத்தைக் கண்டறியவில்லை என்றும், ஆனால் துப்பாக்கிச் சூடு இனவெறி தூண்டப்பட்டதா என்பதை ஆராய்ந்து வருவதாகவும் அந்த அதிகாரி தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com