

யவுண்டி,
ஆப்பிரிக்க நாடுகளான கேமரூன், நைஜீரியா, சாட், மாலி மற்றும் நைகர் ஆகிய நாடுகளை ஒன்றினைத்து இஸ்லாமிய மத அடிப்படையிலான அரசை நிறுவும் நோக்கத்தோடு போகோஹரம் பயங்கரவாத அமைப்பு செயல்பட்டு வருகிறது.
இந்த பயங்கரவாதிகளை ஒழிக்கும் நடவடிக்கையில் அந்தந்த நாடுகளை சேர்ந்த பாதுகாப்பு படையினர் அதிரடி தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். அதேவேளை, இந்த பயங்கரவாத குழு பொதுமக்கள், பாதுகாப்பு படையினரை குறிவைத்து அவ்வப்போது தாக்குதல்களை நடத்தி வருகிறது.
இந்நிலையில், கேமரூன் நாட்டின் வடக்கு மாகாணத்தின் கிஸ்மடரி என்ற கிராமம் மற்றும் அதை சுற்றிய பகுதிகளில் போகோஹரம் பயங்கரவாதிகள் சனி, ஞாயிற்றுகிழமைகளில் அதிரடி தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலின்போது ராணுவ வீரர் உள்பட 5 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.