’மரணத்திற்கு பிறகு வாழ்க்கை’ மூளை அறுவை சிகிச்சை நிபுணரின் அனுபவ புத்தகம்

மரணத்திற்கு பிறகு வாழ்க்கையில் என்ன நடக்கும் என மூளை அறுவை சிகிச்சை நிபுணர் தனது அனுபவம் குறித்து புத்தகம் எழுதி உள்ளார்.
’மரணத்திற்கு பிறகு வாழ்க்கை’ மூளை அறுவை சிகிச்சை நிபுணரின் அனுபவ புத்தகம்
Published on

மரணத்திற்குப் பின் வாழ்க்கை உண்டா, மரணத்திற்கு பின் என்ன நடக்கிறது என்ற கேள்வியைப்போல் சிக்கலான ஒரு கேள்வி வேறொன்றுமில்லை. மனிதனின் மனதை உலுக்கியெடுக்கிற இந்தக் கேள்வி இன்றுவரை உலவிக்கொண்டு இருக்கிறது.

ஒரு மூளை அறுவை சிகிச்சை நிபுணர் லிவிங் இன் எ மூன்ஃபுல் யுனிவர்ஸ் புத்தகம் ஆசிரியர் 2008 ஆம் ஆண்டில் ஒரு வாரம் கோமாவில் இருந்ததாகவும் , அவர் அனுபவித்த அனுபவங்கள் அனைத்தையும் கூறி உள்ளார்.

இந்த ஆண்டு தொடக்கத்தில் இந்த புத்தகம் வெளியானது. டாக்டர் எபென் அலெக்ஸாண்டர், மரணம் என்பதை அவர் எப்படி உணர்ந்தார் என்று விவரிக்கிறார். மேலும் அவர் வாழ்க்கையின் பின் வரும் விஷயங்களைப் பற்றிய ஆழமான புரிதலை இப்போது கொண்டிருக்கிறார் எனவும் கூறினார். தி சன் பத்திரிகையில் வெளியிடப்பட்ட ஒரு தகவலின் படி, டாக்டர் அலெக்சாண்டர் புத்தகத்தில் எழுதி உள்ளதாவது:-

நான் ஒரு வாரம் ஒரு கோமா நிலையில் இருந்தேன்,மெனிகோசென்சலிடல்ஸ் ஒரு மூளை நோய்த்தொற்று நோயால் பாதிக்கபட்டேன் இதில் உயிர் பிழைக்க 2 சதவீத வாய்ப்பே உள்ள அவ்வளவு தீவிரத்தன்மை உடையது.

ஒரு வாரம் கழித்து, என் மருத்துவர்கள் நான் மரண் அடையும் நேரம் நெருங்கிவிட்டதாக எனது குடும்பத்தினருடன் கூறி விட்டனர்.டாக்டர் தனது புத்தகத்தில் மெதுவாக மேலே இருந்து கீழே ஒரு ஒளி இறங்குவதாக பார்த்தேன் என்று கூறி உள்ளார். அது வட்ட வட்டமாக இருந்தது, என்று பெரிதும் இசை வெளியீடு இருந்தது. நான் ஸ்பின்னிங் மெலடி என்று அழைத்தேன்.

அந்த ஒளியை திறந்து கொண்டு செல்வதைபோல் உணர்ந்தேன். அங்கு பசுமையான பள்ளத்தாக்கு மற்றும் அங்கு நீர்வீழ்ச்சிகளும் படிக குளங்களில் இருந்தன.

அங்கு மேகங்கள் இளஞ்சிவப்பு மார்ஸ்மெல்லோ பப்ஸ் போன்று இருந்தன. அதற்கு பின்னால் வெள்ளையாக இருந்தது. வானம் நீல நிறமாக இருந்தது,மரங்கள்,விலங்குகள் மற்றும் மக்கள் இருந்தனர்.

தண்ணீர் கூட, ஆறுகள் ஓடுவது போல் அல்லது மழை போல் இறங்குகிறது.

உண்மையில் இது போன்ற ஒரு இடம் உண்மையில் இருந்ததாக நிரூபிக்கப்படவில்லை என்றாலும், மரணத்திற்கு பிறகு வாழ்க்கையில் இது போன்ற காட்சிகள் இருந்ததாக கூறபட்டுவதற்கு ஆதாரங்கள் அதிகரித்து வருவதாக கூறினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com