பாகிஸ்தானில் இருந்து பறந்து வந்த 'டிரோன்'- சுட்டு வீழ்த்திய பாதுகாப்பு படையினர்

பஞ்சாப் மாநிலத்தில் பாகிஸ்தானில் இருந்து பறந்து வந்த ‘டிரோன்’சுட்டு வீழ்த்தப்பட்டது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

சண்டிகார்,

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் மாவட்டத்தில் சர்வதேச எல்லையையொட்டி தாக்கே என்ற கிராமம் அமைந்திருக்கிறது. இங்கு நேற்று முன்தினம் மாலை பாகிஸ்தான் பகுதியில் இருந்து ஒரு 'டிரோன்' பறந்து வந்தது.

அதை நோக்கி எல்லை பாதுகாப்பு படையினர் துப்பாக்கியால் சுட்டனர். பின்னர் மேற்கொள்ளப்பட்ட தேடுதலில், சேதம் அடைந்த நிலையில், சீனாவில் தயாரிக்கப்பட்ட ஒரு 'டிரோனை' எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் கண்டுபிடித்து கைப்பற்றினர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com