நேபாளத்தில் ஆற்றில் பேருந்து கவிழ்ந்து விபத்து: 14 பேர் பலி

நேபாளத்தில் பேருந்து ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 14 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
நேபாளத்தில் ஆற்றில் பேருந்து கவிழ்ந்து விபத்து: 14 பேர் பலி
Published on

காத்மாண்டு

நேபாளத்தின் தாடிங் மாவட்டத்தில் உள்ள நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த பேருந்து ஆற்றில் பாய்ந்து விபத்துக்குள்ளானதில் பேருந்தில் பயணம் செய்த 14 பேர் பலியாகினர். ராஜ்பிராஜ் என்ற இடத்தில் இருந்து தலைநகர் காத்மாண்டுவுக்கு 50 பேருடன் சென்று கொண்டிருந்த இந்த பேருந்து, வளைவு ஒன்றில் திரும்புகையில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து ஆற்றில் பாய்ந்ததாக அங்குள்ள ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த விபத்தில், பேருந்தில் பயணம் செய்த 14 பேர் பலியாகினர். 15 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டனர். பேருந்தில் பயணித்த பயணிகளின் எண்ணிக்கை சரியாக தெரியவில்லை என்று உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், பல பயணிகள் ஆற்றில் மூழ்கியிருக்க கூடும் என்று கூறப்படுகிறது. அவர்களை தேடும் பணியில் நீச்சல் வீரர்களும் மீட்பு குழுவினரும் தீவிரமாக மீட்கப்பட்டுள்ளனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com