அமெரிக்காவில் இனவெறிக்கு எதிராக சட்டம் இயற்றிய கலிபோர்னியா

இன பாகுபாடுக்கு எதிரான சட்டத்தை இயற்றிய முதல் மாகாணமாக கலிபோர்னியா உள்ளது.
அமெரிக்காவில் இனவெறிக்கு எதிராக சட்டம் இயற்றிய கலிபோர்னியா
Published on

உலகின் சக்தி வாய்ந்த நாடாக கருதப்படும் அமெரிக்காவில் இன பாகுபாடு என்பது முக்கிய பிரச்சினையாக உள்ளது. சமீப காலமாக அங்கு இனவெறி தாக்குதல் அதிகமாக அரங்கேறுகின்றன.

இந்த நிலையில் அமெரிக்காவில் அதிக மக்கள் தொகை கொண்ட மாகாணமான கலிபோர்னியாவில் இன பாகுபாடு தடை சட்டம் நிறைவேற்றப்பட்டு உள்ளது. இது கலிபோர்னியாவில் உள்ள அனைத்து மக்களுக்கும் வணிக நிறுவனங்கள், அலுவலகங்களில் சம உரிமை வழங்க வழிவகை செய்கிறது. மேலும் நிறவெறி, இன பாகுபாடு அடிப்படையிலான தாக்குதலில் இருந்து வெளிப்படையான பாதுகாப்பையும் அளிக்கிறது. இதன்மூலம் இன பாகுபாடுக்கு எதிரான சட்டத்தை இயற்றிய முதல் மாகாணமாக கலிபோர்னியா உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com