

கொரோனா தடுப்பூசி முழுமையாக போட்டுக்கொண்ட அமெரிக்கர்கள் வரும் ஆகஸ்ட் 9 அம் தேதி முதல் கனடா வருவதற்கு எந்த கட்டுப்பாடுகளும் இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தடுப்பூசி போட்டுக்கொண்ட அனைத்து வெளிநாட்டு பயணிகளுக்கும் செ ப்டம்பர் 7 ஆம் தேதிக்குப் பிறகு, பயணக்கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுவதாக கனடா அரசு அறிவித்துள்ளது.
கொரோனா பெருந்தொற்று காரணமாக கடந்த 2020- ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் அமெரிக்கவுடனான தரைவழி மற்றும் வான்வழி பாதையை கனடா மூடிவைத்து இருந்தது. இந்த நிலையில், ஏறத்தாழ ஒன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு கனடா, அமெரிக்காவுடனான எல்லையை திறக்க உள்ளது.