

வாடிகன் சிட்டி,
இந்தியாவின் சார்பில் மத்திய வெளியுறவுத்துறை இணை மந்திரி முரளிதரன் தலைமையிலான உயர்மட்டக்குழுவினர் இந்த விழாவில் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சிக்கு பின் போப் ஆண்டவரை முரளிதரன் சந்தித்தார்.
அப்போது அவருக்கு, மகாத்மா காந்தியின் பார்வையில் பகவத் கீதை என்ற புத்தகத்தை பரிசாக வழங்கினார். மேலும் இந்தியாவின் பாரம்பரியம் மிக்க கேரள கோவில் திருவிழாக்களை பிரதிபலிக்கும் வகையில், அலங்கரிக்கப்பட்ட யானை சிலை ஒன்றையும் போப் ஆண்டவரிடம் முரளிதரன் வழங்கினார். இவற்றை மகிழ்ச்சியுடன் பெற்றுக்கொண்ட போப் பிரான்சிஸ், அதற்காக நன்றி தெரிவித்துக் கொண்டார்.