

பெய்ஜிங்,
அமெரிக்கா மற்றும் சீனா ஆகிய இரு நாடுகளும் வர்த்தக போரில் ஈடுபட்டு வருகின்றன. இந்த நாடுகள் இரண்டும் ஒன்றின் மீது மற்றொன்று என இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீது கூடுதல் வரி விதிப்பில் ஈடுபட்டு வருகின்றன.
சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு நேற்று முன்தினம் அமெரிக்கா 200 பில்லியன் டாலர் அளவுக்கு கூடுதல் வரி விதித்தது.
இந்த நிலையில், சீன வர்த்தக துணை மந்திரி வாங் சோவன் செய்தியாளர்களிடம் இன்று பேசும்பொழுது, அமெரிக்கா இதுபோன்ற வர்த்தக தடைகளில் ஈடுபட்டு வருகிறது. சிலரது கழுத்தில் அது கத்தியை வைக்கிறது.
இதுபோன்ற சூழ்நிலைகளில் பேச்சுவார்த்தைகளில் எப்படி ஈடுபட முடியும்? என கேள்வி எழுப்பியுள்ளார்.