சீனாவில் முன்னாள் வேளாண் துறை மந்திரிக்கு மரண தண்டனை


சீனாவில் முன்னாள் வேளாண் துறை மந்திரிக்கு மரண தண்டனை
x
தினத்தந்தி 29 Sept 2025 9:33 AM IST (Updated: 29 Sept 2025 3:55 PM IST)
t-max-icont-min-icon

ஊழல் வழக்கில் டாங் ரெஞ்சியனுக்கு கோர்ட்டு மரண தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது.

பீஜிங்,

சீனாவின் முன்னாள் வேளாண்மை மற்றும் கிராமப்புற விவகார மந்திரி டாங் ரெஞ்சியன் (வயது 63). இவர் தனது பதவிக்காலத்தில் பல்வேறு திட்டங்களை ஒதுக்கீடு செய்வதில் முறைகேடு செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. அப்போது அரசின் திட்டங்களை பணத்தை வாங்கிக் கொண்டு பயனாளிகளுக்கு ஒதுக்கியதாக கூறப்படுகிறது. இதுதொடர்பான வழக்கு ஜிலின் மாகாணம் சாங்சுன் கோர்ட்டில் நடைபெற்று வந்தது.

விசாரணை நிறைவடைந்த நிலையில் நலத்திட்டங்களை ஒதுக்குவதற்காக பயனாளிகளிடம் இருந்து சுமார் ரூ.336 கோடி வரை லஞ்சம் பெற்றது தெரியவந்துள்ளது. நாட்டையே உலுக்கிய இந்த ஊழல் வழக்கில் டாங் ரெஞ்சியனுக்கு கோர்ட்டு மரண தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது. மேலும் அந்த தொகையை அவரிடம் இருந்து கைப்பற்றி தேசிய கருவூலத்துக்கு மாற்றவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

1 More update

Next Story