சீன மீன்பிடிக் கப்பல் கவிழ்ந்து விபத்து: 39 பேர் மாயம் - தேடும் பணி தீவிரம்

இந்தியப் பெருங்கடலில் சீன மீன்பிடிக் கப்பல் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் கப்பலில் இருந்த 39 பேர் மாயமாகியுள்ளனர்.
சீன மீன்பிடிக் கப்பல் கவிழ்ந்து விபத்து: 39 பேர் மாயம் - தேடும் பணி தீவிரம்
Published on

பெய்ஜிங்,

சீனாவின் ஆழ்கடல் மீன்பிடிக் கப்பல் ஒன்று மத்திய இந்தியப் பெருங்கடலில் செவ்வாய்க்கிழமை அதிகாலை 3 மணியளவில் (பெய்ஜிங் நேரம்) கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் கப்பலில் இருந்த 39 பேர் மாயமாகியுள்ளனர்.

அவர்களில் 17 பேர் சீன பிரஜைகள், 17 பேர் இந்தோனேசியாவைச் சேர்ந்தவர்கள் மேலும் 5 பேர் பிலிப்பைன்சை சேர்ந்தவர்களாகும். இதையடுத்து காணாமல் போனவர்களை தேடும் பணி நடைபெற்று வருகிறது.

முழு மீட்புப் பணிகளுக்கு உத்தரவிட்டுள்ள சீன அதிபர் ஜி ஜின்பிங், சர்வதேச கடல்சார் தேடல் மற்றும் மீட்பு உதவிகளை ஒருங்கிணைப்பதற்கு அழைப்பு விடுத்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com