காங்கோ: ஆயுள் தண்டனை கைதிகள் அமெரிக்காவுக்கு நாடு கடத்தல்

காங்கோவில் ஆட்சி கவிழ்ப்பு சதியில் ஈடுபட்டதாக அமெரிக்கர்கள் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
AI Image -Meta
AI Image -Meta
Published on

கின்ஷாசா,

ஆப்பிரிக்க நாடான காங்கோ ஜனநாயக குடியரசில் கடந்த ஆண்டு ஆட்சி கவிழ்ப்பு சதியில் கிளர்ச்சியாளர்கள் ஈடுபட்டனர். ராணுவத்தின் முயற்சியால் இந்த கலவரம் ஒடுக்கப்பட்டது. இதனையடுத்து ஆட்சியை கவிழ்க்க சதித்திட்டம் தீட்டியதாக பலர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் 3 அமெரிக்கர்கள் உள்பட 37 பேருக்கு ராணுவ கோர்ட்டு மரண தண்டனை வழங்கியது.

இதற்கிடையே அமெரிக்கா-காங்கோ ஜனநாயக குடியரசு இடையே கைதிகள் பரிமாற்ற ஒப்பந்தம் கையெழுத்தானது. இதனையடுத்து அமெரிக்க கைதிகளின் மரண தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. எனவே மீதமுள்ள தண்டனையை அனுபவிக்க அவர்கள் தற்போது அமெரிக்காவுக்கு நாடு கடத்தப்பட்டு உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com