திபெத், ஆப்கானிஸ்தானில் அடுத்தடுத்து நிலநடுக்கம்..!

திபெத்தில் ரிக்டர் 3.7 அளவிலும், ஆப்கானிஸ்தானில் ரிக்டர் 3.5 அளவிலும் நிலநடுக்கம் பதிவாகி உள்ளது.
நிலநடுக்கம்
Published on

காபுல்,

சீனாவின் தன்னாட்சி பெற்ற மாகாணமாக திபெத் உள்ளது. இமயமலையின் வடக்கு பகுதியில் உயரமான இடத்தில் திபெத் அமைந்துள்ளது. திபெத்தில் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 7ம் தேதி பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்நாட்டின் ஷிகாட்சே நகரை மையமாக கொண்டு நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் 120க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

திபெத்தில் நிலநடுக்கம்

இந்நிலையில், திபெத்தில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டது. காலை 4.02 மணியளவில் (இந்திய நேரப்படி) ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.7 ஆக பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

30 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், 28.365 டிகிரி வடக்கு அட்சரேகையிலும், 87.594 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையிலும் இருக்கும் என முதலில் தீர்மானிக்கப்பட்டது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் மற்றும் பாதிப்புகள் குறித்து எந்தவித தகவலும் வெளியாகவில்லை.

ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்

இதனையடுத்து, ஆப்கானிஸ்தானிலும் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. காலை 4.20 மணியளவில் (இந்திய நேரப்படி) ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 3.5 ஆக பதிவாகி உள்ளது என தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

ஆப்கானிஸ்தானில் 163 கிலோமீட்டர் ஆழத்தை மையமாக கொண்டு இந்த நிலநடுக்கம் 36.475 டிகிரி வடக்கு அட்சரேகையிலும், 71.175 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையிலும் இருக்கும் என முதலில் தீர்மானிக்கப்பட்டது.

X

Daily Thanthi
www.dailythanthi.com