பிரேசிலில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 1,50,555 ஆக அதிகரிப்பு

பிரேசிலில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை தற்போது 1,50,555 ஆக அதிகரித்துள்ளது.
பிரேசிலில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 1,50,555 ஆக அதிகரிப்பு
Published on

பிரேசிலியா,

உலக அளவில் கொரோனா வைரசால் இதுவரை 3.79 கோடிக்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் தென் அமெரிக்க நாடான பிரேசிலில் கொரோனாவுக்கு பலியானவர்கள் எண்ணிக்கை தற்போது 1,50,555 ஆக அதிகரித்துள்ளது.

பிரேசிலில் கொரோனா தொற்றறுக்கு நேற்று 290 பேர் பலியாகினர். இதனைத் தொடர்ந்து பிரேசிலில் கொரோனாவால் பலியானவர்கள் எண்ணிக்கை தற்போது 1,50,555 ஆக அதிகரித்துள்ளது.

பிரேசிலில் இதுவரை 50,96,209 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 44,70,165 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது கொரோனா பாதிப்புக்கு 4,75,489 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com