இந்தோனேசியாவில் புதிதாக 13,668 பேருக்கு கொரோனா பாதிப்பு: மேலும் 335 பேர் பலி

இந்தோனேசியாவில் கொரோனா உறுதி செய்யப்பட்டவாகளின் எண்ணிக்கை நேற்று 20 லட்சத்தைக் கடந்தது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

ஜகார்த்தா,

உலக அளவில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பில் முதலிடத்தில் அமெரிக்காவும், இரண்டாம் இடத்தில் இந்தியாவும், மூன்றாவது இடத்தில் பிரேசிலும் உள்ளன.

இதுவரை உலக அளவில் 17.98 கோடிக்கும் அதிகமானோர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். வைரஸ் தொற்றுக்கு இதுவரை 38.96 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் வரிசையில் தற்போது இந்தோனேசியா 18-வது இடத்தில் உள்ளது.

இந்நிலையில் இந்தோனேசியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 13,668 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் இந்தோனேசியாவில் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தற்போது 20,18,113 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்றுக்கு மேலும் 335 பேர் உயிரிழந்ததால், அங்கு பலியானோர் எண்ணிக்கை 55 ஆயிரத்து 291 ஆக உயர்ந்துள்ளது.

இந்தோனேசியாவில் இதுவரை கொரோனா தொற்றில் இருந்து 18,10,136 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது 1,52,686 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாக அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com