சவுதி அரேபியாவில் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கியது

சவுதி அரேபியாவில் நேற்று முதல் இலவசமாக கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கியது.
சவுதி அரேபியாவில் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கியது
Published on

ரியாத்,

இங்கிலாந்து, அமெரிக்காவில் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கி நடந்து வருகிறது. இந்த நிலையில், வளைகுடா நாடான சவுதி அரேபியாவிற்கு நேற்று முன்தினம் கொரோனா தடுப்பூசி கிடைத்தது. இதையடுத்து, அங்கு நேற்று முதல் இலவசமாக கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கியது.

அந்நாட்டின் சுகாதாரத்துறை மந்திரி தவ்பிக் அல் ரபியா கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார். சவுதி அரேபியாவில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள இதுவரை 1 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பதிவு செய்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com