அமெரிக்காவில் அகதிகள் தடுப்பு முகாமில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 1,145 ஆக அதிகரிப்பு

அமெரிக்காவில் அகதிகள் தடுப்பு முகாமில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 1,145 ஆக அதிகரித்துள்ளது.
அமெரிக்காவில் அகதிகள் தடுப்பு முகாமில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 1,145 ஆக அதிகரிப்பு
Published on

* பாலஸ்தீனத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைக்காக வெண்டிலேட்டர்கள், தனிநபர் பாதுகாப்பு உபகரணங்கள் உள்பட 14 டன் மருத்துவ பொருட்களை ஐக்கிய அரபு அமீரகம் அனுப்பி வைத்துள்ளது.

* ஐ.நா சபைக்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதியாக நியமிக்கப்பட்டுள்ள சென்னையை சேர்ந்த டி.எஸ். திருமதி, பதவியேற்புக்காக அமெரிக்காவின் நியூயார்க் நகருக்கு சென்றுள்ளார்.

* தைவான் மீது சீனாவின் அழுத்தங்கள் அதிகரித்து வரும் நிலையில் அந்த நாட்டின் அதிபர் சாய் இங் வென், தொடர்ந்து 2-வது முறையாக அதிபராக நேற்று பதவியேற்றார்.

* தென்அமெரிக்கா நாடான கொலம்பியாவில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு வருகிற 25-ந்தேதியுடன் முடிவடைய இருக்கும் நிலையில் ஊரடங்கை 31-ந்தேதி வரை நீட்டித்து அதிபர் இவான் டியூக் நேற்று உத்தரவு பிறப்பித்தார்.

* அமெரிக்காவில் அகதிகள் தடுப்பு முகாமில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 1,145 ஆக அதிகரித்துள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com