சீனாவின் உகான் நகரில் மேலும் 5 பேருக்கு கொரோனா பாதிப்பு
சீனாவின் உகான் நகரில் மேலும் 5 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது.
Published on:
Copied
Follow Us
பீஜிங்,
சீனாவின் ஹுபெய் மாகாணம் உகான் நகரில்தான், கொரோனா வைரஸ் முதன்முதலில் கண்டறியப்பட்டது. அந்த உகான் நகரில், ஒரு மாத இடைவெளிக்கு பிறகு, நேற்று முன்தினம் ஒருவருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து, கடந்த 24 மணி நேரத்தில், அங்கு மேலும் 5 பேருக்கு கொரோனா தாக்கி உள்ளது.