கொரோனா வைரஸ் தாக்குதல்: தற்போதுள்ள தடுப்பூசிகளை முழுமையாக நம்ப முடியாது - அமெரிக்க விஞ்ஞானிகள்

கொரோனாவின் தாக்குதலுக்கு தற்போது பயன்படுத்தப்பட்டு வரும் தடுப்பூசிகளை முழுமையாக நம்ப முடியாது என அமெரிக்க விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
படம்: GETTY IMAGES
படம்: GETTY IMAGES
Published on

வாஷிங்டன்

கொரோனா வைரசால் இதுவரை 2804 பேர் உயிர் இழந்துள்ளனர். கொரோனாவின் அழிவை கட்டுப்படுத்த உலக நாடுகள் போராடி வருகின்றன

கொரோனா வைரஸ் தடுப்பூசி குறித்து கருத்துத் தெரிவித்துள்ள டெக்சாஸ் மற்றும் நியூயார்க்கில் இயங்கி வரும் தேசிய சுகாதார நிறுவனத்தின் ஆய்வாளர்கள், கொரோனாவின் தாக்குதலுக்கு தற்போது பயன்படுத்தப்பட்டுவரும் தடுப்பூசிகளை முழுமையாக நம்ப முடியாது. கொரோனா வைரசைக் கட்டுப்படுத்துவதற்கான மருந்துகளை கண்டுபிடிக்க தொடர்ந்து ஆய்வுகள் நடந்து வருகிறது. தடுப்பூசிகள் கிடைக்க ஒரு வருடத்திற்கு மேல் ஆகலாம் என்று தெரிவித்துள்ளனர்.

நியூயார்க், டெக்சாஸ், ஹூஸ்டன் மற்றும் சீனாவில் தடுப்பூசிகளைக் கண்டுபிடிக்க விஞ்ஞானிகள் முயன்று வருவதாகக் கூறிய ஹூஸ்டன் மருத்துவக் கல்லூரி பேராசிரியர் பீட்டர் ஹோடெஸ் இது ஒரு சவாலான மற்றும் அச்சுறுத்தலான பணி என்றும், கொரோனாவின் தொற்று தீவிரமாக இருப்பதாகவும், உலகளாவிய சுகாதார அச்சுறுத்தலை ஏற்படுத்தியிருப்பதாகவும் குறிப்பிட்டார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com