ஈரானில் 50 லட்சத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு எண்ணிக்கை!

ஈரான் நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 33,170 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

டெஹ்ரான்,

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நாடுகளில் ஈரான் தற்போது 9-வது இடத்தில் உள்ளது.

இந்நிலையில், ஈரானில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 33,170 பேர் கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்துள்ளனர். இதன்மூலம் பாதிப்பு அடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 50,25,233 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 599 பேர் பலியானதால், அங்கு உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்து 08 ஆயிரத்து 393 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து 42 லட்சத்து 37 ஆயிரத்து 315 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது கொரோனா பாதிப்புடன் 6,79,525 பேர் சிகிச்சை பெற்று வருவதாக அந்நாட்டு சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

முன்னதாக ஈரான் நாட்டு சுகாதார அமைச்சகத்தால் வெளியிடப்பட்ட புதிய புள்ளிவிவரங்கள் படி இதுவரை 1,90,09,000 க்கும் அதிகமானவர்கள் கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸைப் பெற்றுள்ளனர் என்றும் நேற்று நிலவரப்படி 9.05 மில்லியனுக்கும் அதிகமானோர் இரண்டாவது டோஸ் மருந்தைப் பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com