போலீஸ் வேன், சிறைத்துறை பஸ் நேருக்கு நேர் மோதி கோர விபத்து; 16 பேர் பலி

தெற்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு நமீபியா
போலீஸ் வேன், சிறைத்துறை பஸ் நேருக்கு நேர் மோதி கோர விபத்து; 16 பேர் பலி
Published on

விண்ட்ஹொக்,

தெற்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு நமீபியா. இந்நாட்டின் ஹர்டெப் மாகாணம் மெரிண்டெல் நகரில் நேற்று முன் தினம் மாலை சிறைத்துறை பஸ்சில் போலீசார், கைதிகள் உள்பட 13 பேர் பயணித்தனர். அந்த பஸ் நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்தது. அப்போது, போலீசார் 6 பேருடன் வந்தகொண்டிருந்த போலீஸ் வேன் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சிறைத்துறை பஸ் மீது மோதியது.

இந்த கோர விபத்தில் 14 போலீசார் உள்பட 16 பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர். மேலும், 3 பேர் படுகாயமடைந்தனர். தகவலறிந்து விரைந்து சென்ற மீட்புக்குழுவினர் படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த விபத்து தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com