இந்தோனேசிய நில சரிவில் பலி எண்ணிக்கை 15 ஆக உயர்வு; மீட்பு பணியில் சிக்கல்

இந்தோனேசியாவில் ஏற்பட்ட நில சரிவில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 15 ஆக உயர்வடைந்து உள்ளது.
இந்தோனேசிய நில சரிவில் பலி எண்ணிக்கை 15 ஆக உயர்வு; மீட்பு பணியில் சிக்கல்
Published on

ஜகார்த்தா,

இந்தோனேசியாவில் ஜாவா தீவின் மேற்கே அமைந்த சுகாபுமி மாவட்டத்தில் நேற்று முன்தினம் இடைவிடாமல் கனமழை பெய்தது. இதனால் ஏற்பட்ட வெள்ளம் ஊர்களுக்குள் புகுந்தது. இதனை தொடர்ந்து பல இடங்களில் பயங்கர நிலச்சரிவுகள் ஏற்பட்டன.

சிர்னாரேஸ்மி என்கிற கிராமத்தில் 30 வீடுகள் மண்ணில் புதைந்து போயின. பாதிக்கப்பட்ட பகுதிகளில் ராணுவ வீரர்கள், போலீசார் மற்றும் மீட்பு குழுவினர் தீவிர மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதில் 9 பேர் வரை பலியாகி இருந்தனர். இந்த நிலையில், நில சரிவில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 15 ஆக உயர்வடைந்து உள்ளது. 3 பேர் காயமடைந்துள்ளனர். 20 பேரை இன்னும் காணவில்லை.

அவர்களை தேடும் பணியில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதுபற்றி தேசிய பேரிடர் மேலாண் அமைப்பின் செய்தி தொடர்பு அதிகாரி சுடோபோ பர்வோ நுகுரோஹோ கூறும்பொழுது, மண்ணில் புதைந்து போனவர்களை மீட்கும் பணியில் மீட்பு குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.

எனினும், சிறிய அளவில் நான்கு நில சரிவுகள் ஏற்பட்டுள்ளன. மழை பெய்யும்பொழுது மற்றொரு நில சரிவு ஏற்பட கூடிய ஆபத்தும் உள்ளது. இதனால் மீட்பு குழுவினர் பணியை தொடர்வதில் அச்சுறுத்தல் ஏற்பட்டு உள்ளது என தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com