உக்ரைனுக்கு எப்-16 போர் விமானங்களை வழங்க தயார்- டென்மார்க்

ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான டென்மார்க் உக்ரைனுக்கு எப்-16 ரக போர் விமானங்களை வழங்க தயாராக இருப்பதாக அறிவித்துள்ளன.
உக்ரைனுக்கு எப்-16 போர் விமானங்களை வழங்க தயார்- டென்மார்க்
Published on

உக்ரைன்-ரஷியா போரில் அமெரிக்கா மற்றும் பல்வேறு ஐரோப்பிய நாடுகள் உக்ரைனுக்கு ஏராளமான ஆயுதங்களை வழங்கி வருகின்றன. அதன் ஒரு பகுதியாக உக்ரைனுக்கு போர் விமானங்களை வழங்க வேண்டுமென அந்த நாட்டின் அதிபர் ஜெலன்ஸ்கி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். ஆனால் அமெரிக்காவும், ஐரோப்பிய நாடுகளும் போர் விமானங்களை வழங்க தயக்கம் காட்டி வருகின்றன. இந்த நிலையில் ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான டென்மார்க் உக்ரைனுக்கு எப்-16 ரக போர் விமானங்களை வழங்க தயாராக இருப்பதாக அறிவித்துள்ளன.

இதுகுறித்து அந்த நாட்டின் ராணுவ மந்திரி டிரோல்ஸ் லண்ட் பால்சன் கூறுகையில், "உக்ரைன்-ரஷியா போரில் ஒரு கட்டத்தில் போர் விமானங்களின் பங்களிப்பு என்பதை மறுக்க முடியாது. எனவே ரஷியாவின் படையெடுப்புக்கு எதிரான உக்ரைனின் தற்காப்புக்கு உதவ எப்-16 ரக போர் விமானங்களை வழங்க டென்மார்க் அரசு தயாராக இருக்கிறது" என்றார்.

இதனிடையே வெள்ளை மாளிகையில் நேற்று பத்திரிகையாளர்களை சந்தித்த அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனிடம் "உக்ரைனுக்கு எப்-16 ரக போர் விமானங்கள் வழங்கப்படுமா?" என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் "இப்போதைக்கு அது சாத்தியமில்லை" என பதிலளித்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com