ஆப்கானிஸ்தானில் பதுங்கு குழிகள் அழிப்பு; 20 தலீபான் பயங்கரவாதிகள் சுட்டு கொலை

ஆப்கானிஸ்தானில் வான்வழி தாக்குதலில் 20 தலீபான் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.
ஆப்கானிஸ்தானில் பதுங்கு குழிகள் அழிப்பு; 20 தலீபான் பயங்கரவாதிகள் சுட்டு கொலை
Published on

காபூல்,

ஆப்கானிஸ்தானில் கிழக்கு குணார் மாகாணத்தில் காஜி அபாத் மாவட்டத்தில் கடந்த 24 மணிநேரத்தில் அந்நாட்டு ராணுவம் வான்வழி தாக்குதலில் ஈடுபட்டது.

இதில், தலீபான் பயங்கரவாதிகளின் பதுங்கு குழிகளை விமானத்தில் சென்று தாக்கி அழித்தனர். இந்த தாக்குதலில் 20 தலீபான் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். 8 பயங்கரவாதிகள் காயமடைந்தனர் என ராணுவ வட்டாரம் வெளியிட்டு உள்ள அறிக்கை தெரிவிக்கின்றது.

நாட்டின் எந்த பகுதியிலும் உள்ள தலீபான் பயங்கரவாதிகளை இலக்காக கொண்டு பாதுகாப்பு படையினரின் தாக்குதல்கள் தொடரும் என்றும் அந்த அறிக்கை தெரிவித்து உள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com