வங்காளதேச தலைநகர் டாக்காவில் அதிகரிக்கும் விவாகரத்துகள் - மாதந்தோறும் 600 வழக்குகள் பதிவு

விவாகரத்து வழக்குகளை பதிவு செய்வதில் ஆண்களை விட பெண்களே அதிகம் இருப்பதாக கண்டறியப்பட்டு உள்ளது.
வங்காளதேச தலைநகர் டாக்காவில் அதிகரிக்கும் விவாகரத்துகள் - மாதந்தோறும் 600 வழக்குகள் பதிவு
Published on

டாக்கா,

வங்காளதேச தலைநகர் டாக்காவில் கடந்த சில ஆண்டுகளாக விவாகரத்துகள் அதிகரித்து வருவதாக ஆய்வில் கண்டறியப்பட்டு உள்ளது. அங்குள்ள 2 மாநகராட்சிகளில் மாதந்தோறும் சராசரியாக 600 விவாகரத்து வழக்குகள் பதிவு செய்யப்படுவதாக கூறப்படுகிறது. அந்த வகையில் வடக்கு டாக்கா மாநகராட்சியில் கடந்த 2020-ம் ஆண்டு 3,442 திருமண முறிவு நடந்துள்ளன. 2021-ம் ஆண்டில் மேலும் கூடுதலாக 1000 விவாகரத்துகள் வழங்கப்பட்டுள்ளன. 2022-ல் இது 5,126 ஆக அதிகரித்து இருந்தது.

இதைப்போல தெற்கு மாநகராட்சியில் 2021-ல் 7,245 குடும்பங்கள் பிரிந்துள்ளன. 2022-ல் இது 7,698 ஆக அதிகரித்து இருந்தது. இந்த ஆண்டிலும் முதல் 3 மாதங்களில் மட்டும் 1,690 பேர் மனு செய்திருப்பது அதிகாரிகளை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது. இந்த விவாகரத்து வழக்குகளை பதிவு செய்வதில் ஆண்களை விட பெண்களே அதிகம் இருப்பதாக கண்டறியப்பட்டு உள்ளது. இந்த விவாகரத்துகளின் பின்னணியில் பல்வேறு காரணங்கள் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com