ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டரில் 4.3 ஆக பதிவு


ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டரில் 4.3 ஆக பதிவு
x

ஆப்கானிஸ்தானில் இன்று அதிகாலை 3.37 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

காபுல்,

ஆப்கானிஸ்தானில் இன்று அதிகாலை திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது. அதிகாலை 3.37 மணியளவில் (இந்திய நேரப்படி) ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.3 ஆக பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

180 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், 36.52 டிகிரி வடக்கு அட்சரேகையிலும், 71.10 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையிலும் இருக்கும் என முதலில் தீர்மானிக்கப்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் மற்றும் பாதிப்பு குறித்து எந்தவித தகவலும் வெளியாகவில்லை. முன்னதாக, கடந்த 14ம் தேதி ஆப்கானிஸ்தானில் 4.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.



Next Story