வனாடு தீவுகளில் பயங்கர நிலநடுக்கம்.. சுனாமி எச்சரிக்கையும் விடுப்பு

நிலநடுக்கத்தை தொடர்ந்து, சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டு உள்ளது.
வனாடு தீவுகளில் பயங்கர நிலநடுக்கம்.. சுனாமி எச்சரிக்கையும் விடுப்பு
Published on

வனாடு அல்லது வனுவாடு குடியரசு என அழைக்கப்படும் நாடு, பசிபிக் பெருங்கடலின் தெற்கே ஓசியானியாப் பகுதியில் அமைந்துள்ள ஒரு தீவு நாடு ஆகும். இதன் தெற்கு பகுதியில் இன்று 7.1 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

கடலில் இருந்து சுமார் 48 கிலோமீட்டர் (30 மைல்) ஆழத்தில், இசங்கல் நகரத்திலிருந்து 123 கிலோமீட்டர் தெற்கிலும், தலைநகர் போர்ட் விலாவிலிருந்து 338 கிலோமீட்டர் தொலைவிலும் நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அத்துடன், "நிலநடுக்கத்தின் எதிரொலியால் வனாடு மற்றும் நியூ கலிடோனியா கடற்கரைகளில் நிலநடுக்கத்தின் மையப்பகுதியிலிருந்து 300 கிலோமீட்டர்களுக்குள் சுனாமி உருவாகக்கூடும் என்று பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்த தகவல் ஏதும் வெளியாகவில்லை.  

X

Daily Thanthi
www.dailythanthi.com