தஜிகிஸ்தானில் மீண்டும் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 5.1 ஆக பதிவு

தஜிகிஸ்தானில் அடுத்தடுத்து இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
தஜிகிஸ்தானில் மீண்டும் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 5.1 ஆக பதிவு
Published on

துசான்பே,

தஜிகிஸ்தானில் இன்று மாலை நிலநடுக்கம் ஏற்பட்டது. மாலை 3.12 மணியளவில் (இந்திய நேரப்படி) ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.1 ஆக பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. 105 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், 37.498 டிகிரி வடக்கு அட்சரேகையிலும், 72.469 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையிலும் இருக்கும் என முதலில் தீர்மானிக்கப்பட்டது.

இதனையடுத்து, தஜிகிஸ்தானில் இன்று மாலை 3.56 மணியளவில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.1 ஆக பதிவாகி உள்ளது. தஜிகிஸ்தானில் அடுத்தடுத்து இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்பு குறித்து எந்தவித தகவலும் வெளியாகவில்லை.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com